×

காஷ்மீரில் 2 ஜெய்ஷ் இ தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்:  ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள கிண்டிபோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதனை தொடர்ந்து வீரர்கள் தந்த பதிலடியில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

சம்பவ இடத்தில் இருந்து ஏகே ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட தீவிரவாதிகள் ெஜய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பை  சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது குறித்து காஷ்மீர் மண்டல காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் விஜய்குமார் கூறுகையில், ‘‘கடந்த 13ம் தேதி புல்வாமாவில் காவலர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதி உட்பட இரண்டு ஜெய்ஷ் இ தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்’’ என்றார்.



Tags : Jaish ,Kashmir , In Kashmir 2 Jaish e militants shot dead
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!