×

தூர்வாரும் பணிகளை நேரில் ஆய்வு செய்ய: டெல்டா மாவட்டங்களுக்கு செல்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

தஞ்சை: டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை செல்கிறார். தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் கூறுவாய் சாகுபடி சிறப்பாக நடைபெறுவதற்காக ஆறுகள், வழிக்கால்கள், வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. பல்வேறு இடங்களில் இப்பணிகள் நிறைவே எட்டியுள்ளனர் இந்நிலையில் தூர்வாரும் பணிகள் 2 நாள் ஆய்வு செய்யும் திட்டமிட்டுறுக்கும் முதலமைச்சர் இன்று தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் திருவாரூர் மாவட்டம் திருத்திரைபூண்டி உள்ளிட்ட பகுதிகள் ஆய்வு செய்கிறார். இரவு நாகையில் தங்கும் முதலமைச்சர் நாளை மேலும் பல்வேறு ஊர்களுக்கு  சென்று தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்கிறார். முதலமைச்சர் வருகையை ஒட்டி  தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Tags : Delta ,Chief Minister ,MC. K. Stalin , Chief Minister visits Delta districts to inspect dredging works Stalin
× RELATED தென், டெல்டா மாவட்டங்களில் 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு