×

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 29 பேருக்கு வீடு கட்டும் ஆணை: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு கட்டும் அரசின் திட்டத்தில் 29 பேருக்கு வீடு கட்டும் ஆணைகளை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினார். கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அனைவருக்கும் வீடு கட்டும் அரசின் திட்டத்தில்  வீடு கட்டும் ஆணைகள் வழங்கும் விழா நடந்தது. இதில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர்  ஷகிலா அறிவழகன், துணை தலைவர் கேசவன், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், பேரூர் செயலாளர் அறிவழகன், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மு.மணிபாலன், பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக கும்மிடிப்பூண்டி பேரூராட்சி செயல் அலுவலர் யமுனா வரவேற்றார். தொடர்ந்து எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் 29 பயனாளிகளுக்கும் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான வீடு கட்ட ஆணைகளை வழங்கினார். அப்போது, அவர் பேசியதாவது, `6 மாத காலத்திற்குள் வீடுகளை அரசு வழிகாட்டியுள்ள வடிவமைப்பில் கட்டி முடிக்கப்படும். அடுத்த 4 ஆண்டுக்குள் கும்மிடிப்பூண்டி தொகுதியை குடிசைகள் இல்லாத தொகுதியாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது’ என்றார். விழாவில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் எஸ்.டி.டி.ரவி, ஜோதி இளஞ்செல்வம், அப்துல் கரீம், கீதாராணி, நஸ்ரத் இஸ்மாயில், காளிதாஸ், பேரூர் துணை செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழா நிறைவில் பேரூராட்சி பதிவறை எழுத்தர் ரவி நன்றி கூறினார்.

Tags : Gummidipoondi ,DJ Govindarajan , Order to build houses for 29 people in Gummidipoondi municipality: DJ Govindarajan MLA
× RELATED எம்எல்ஏக்கள் டி.ஜெ.கோவிந்தராஜன்,...