×

நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் 43,500 ஏக்கரில் சம்பா, தாளடி விவசாய பணிகள் மும்முரம்

நீடாமங்கலம்: திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் 43,500 ஏக்கர் சம்பா மற்றும் தாளடி விவசாய பணிகள் மும்முரமாக நடை பெற்றது. நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் 52 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இதில் 50 ஆயிரம் ஏக்கர்களில் வேளாண் சார்ந்த பணிகளை விவசாயிகள் செய்து வந்தனர். தமிழக முதல்வர் உத்தரவின்பேரில் கடந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகள் நடந்து வந்தது.

அப்போது 17,500 ஏக்கரில் சம்பா சாகுபடியும், 26 ஆயிரம் ஏக்கரில் தாளடி சாகுபடியும் மும்முரமாக தொடங்கி முடிந்துள்ளது. இதில் 1,800 ஏக்கரில் தென்னை சாகுபடியும், 100 ஏக்கரில் காய்கறி சாகுபடியும், 50 ஏக்கரில் மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட சிறு பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர். இந்நிலையில் நீடாமங்கலம் தாலுகா பகுதியில் இந்த ஆண்டு சுமார் 2,500 ஏக்கரில் நிலத்தடி நீரில் மின் மோட்டாரை பயன்படுத்தி கடம்பூர், பரப்பனாமேடு, சித்தமல்லி மேல்பாதி, பூவனூர், அனுமந்தபுரம், பெரம்பூர், காளாச்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில்கோடை சாகுபடி மும்முரமாக செய்து வருகின்றனர்.

பல்வேறு கிராமங்களில் மண்ணின் தன்மையை மாற்றுவதற்கு கோடை சாகுபடி செய்யவில்லை. கானூர் அன்னவாசல், ரிஷியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குறுவை விதைப்பு விடும் பணி முடிந்து உரம் இடும் பணிகள் நடை பெற்று வருகிறது. சில கிராமங்களில் நிலத்தடி நீரை பயன்படுத்தி குறுவை சாகுபடிக்கு விதை விடும் பணி தொடங்கி நடை பெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காளாச்சேரி பகுதியில் கோடை சாகுபடி அறுவடைக்கு நெல்மணிகள் தயாராக உள்ள நிலையில் அந்த வயலில் அறுவடைக்கு பிறகு குறுவை சாகுபடிக்கு விதை விட நாற்றங்காலை சமன் செய்யும் பணியில், தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

Tags : Samba ,Needamangalam Agricultural Fort , Samba and sorghum are cultivated on 43,500 acres in the Needamangalam agricultural division
× RELATED சம்பா, தாளடி பருவத்தில் 2,53,766 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்