சென்னை: மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு புதுநகரில் வடசென்னை அனல் மின்நிலையம் செயல்படுகிறது. இங்குள்ள முதலாவது நிலையில் உள்ள 3 அலகுகள் மூலம் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும், 2வது நிலையில் உள்ள 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை முதலாவது நிலையில் உள்ள 2வது அலகு கொதிகலன் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதனால் அங்கு 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. பழுதை சரிசெய்யும் பணிகளில் அனல் மின்நிலைய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.