திருச்சி: டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். காவிரி மற்றும் வெண்ணாற்றில் தலா 500 கன அடி, கல்லணை கால்வாய், கொள்ளிடத்தில் 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.