×

காஷ்மீரில் டி.வி.நடிகை அம்ரீன் பட்டை கொன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை. 3 நாளில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்!!.

ஜம்மு: காஷ்மீரின் அவந்திப்போராவில் தொலைக்காட்சி நடிகை அம்ரீன் பட்டை கொன்ற லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 2 பேரை பாதுகாப்புப்படை சுட்டுக் கொன்றது. ஜம்மு- காஷ்மீரின் பத்காம் மாவட்டத்தில் உள்ள சதுரா என்ற பகுதியில் வசித்து வந்த பிரபல டிவி நடிகையான அமரீன் பட்டை நேற்று முன்தினம் இரவு வீட்டுக்குள் நுழைந்து 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். படப்பிடிப்பு இருப்பதாக கூறி அவரை வீட்டில் இருந்து வெளியே அழைத்த தீவிரவாதிகள், திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதில் அம்ரீனும், அவருடைய உறவுக்காரரான 10 வயது சிறுவனும் படுகாயமடைந்தனர். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் அம்ரீன் இறந்தார். இதைத் தொடர்ந்து காஷ்மீரின் பல பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நள்ளிரவில், 2 என்கவுண்டர்கள் நிகழ்ந்துள்ளன. ஸ்ரீநகரின் சௌரா பகுதியில் 2 தீவிரவாதிகளையும் காஷ்மீரின் அவந்திபோரா பகுதியில் 2 தீவிரவாதிகளையும் பாதுகாப்புப் படை சுட்டுக் கொன்றது. இதில் அவந்திபோரா பகுதியில் பலியான 2  தீவிரவாதிகள் தொலைக்காட்சி நடிகை அம்ரீன் படுகொலையில் ஈடுபட்டவர்கள் ஆவர். இவர்கள் ஷாகித் முஷ்டாக் பட் மற்றும் பர்ஹான் ஹபீப் என அடையாளம் தெரிந்தது.

லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் தளபதி லத்தீப் உத்தரவின் பேரில் அவர்கள் அம்ரீனை சுட்டு கொன்றது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து ஏ.கே. 56 ரக துப்பாக்கி ஒன்று, ஒரு பிஸ்டல் மற்றும் பிற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதுபற்றி காஷ்மீர் ஐ.ஜி. கூறும்போது, தொலைக்காட்சி நடிகை அம்ரீன் கொலை வழக்கில் 24 மணிநேரத்தில் தீர்வு காணப்பட்டு உள்ளது. கடந்த 3 நாட்களில் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் 3 ஜெய்ஷ்- இ- முகமது மற்றும் 7 லஷ்கர்-இ- தொய்பா இயக்க உறுப்பினர்கள் என 10 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்,என கூறியுள்ளார்.

Tags : Amreen Patta ,Kashmir , Kashmir, TV actress, Amreen Bhatt, 2 militants
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!