×

சென்னையில் நாளை பாமக சிறப்பு பொதுக்குழு அன்புமணியை தலைவராக அறிவிக்க திட்டம்

சென்னை: பாமகவின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் 28ம் தேதி (நாளை) காலை 11 மணியளவில் சென்னையை அடுத்த திருவேற்காட்டில் நடக்கிறது. கூட்டத்திற்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை வகிக்கிறார். பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இதில் அன்புமணி கட்சியின் மாநில தலைவராக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய தலைவர் ஜி.கே.மணியும் ஆதரவு தெரிவித்துள்ளாராம். ஜி.கே. மணிக்கு ஆலோசகர் பதவி வழங்கப்படலாம் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.



Tags : Anbumani ,Pamaka Special General Committee ,Chennai , Pamaka Special General Committee in Chennai tomorrow Plan to declare Anbumani as leader
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...