சென்னை: மாமல்லபுரத்தில் நடக்க உள்ள செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க சீனா இதுவரை முன்பதிவு செய்யவில்லை. நாளையுடன் முன்பதிவு முடியும்நிலையில் 160க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 303 அணிகள் பதிவு செய்துள்ளன. ஆண்கள் பிரிவில் 168 அணிகளும், பெண்கள் பிரிவில் 135 அணிகளும் இதுவரை முன்பதிவு செய்துள்ளனர்.