×

2022-23ம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 5.19 கோடி பாடப்புத்தகங்கள் தயார்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: 2022-23ம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 5.19 கோடி பாடப்புத்தகங்கள் தயார் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான 3.35 கோடி புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுக்காக 1.83 கோடி பாடப்புத்தகங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 1 முதல் 10ம் வகுப்புகளுக்கு ஜூன் 13ம் தேதி பள்ளிகள் தொடங்குகின்றன.


Tags : 2022-23 Academic Year, Student, Textbook
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...