×

காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் லஷ்கர்-இ-தோய்பா அமைப்பைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!

காபூல் : ஜம்மு - காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமைந்தது முதலாக காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இயக்கங்கள் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று செயல்பட்டு வருவதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, பாகிஸ்தானில் இருந்து இந்த இயக்கங்களுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகள் வழங்கப்படுவதும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, காஷ்மீர் முழுவதும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை காவல்துறையினரும், ராணுவத்தினரும் முழுவீச்சில் தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில், ஜம்மு - காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள Jumagund  கிராமத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸார், ராணுவ வீரர்கள், துணை ராணுவப் படையினர் அடங்கிய பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த, தீவிரவாதிகளை சரணடையுமாறு பாதுகாப்புப் படையினர் அறிவுறுத்தினர்.
ஆனால், இதனை ஏற்காத தீவிவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் அனைவரும் லஷ்கர்-இ-தோய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் இன்னும் யார் என்ற அடையாளம் காணப்படவில்லை என்றும் காஷ்மீர் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், கையெறிகுண்டுகள், வெடிப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதுடன் அப்பகுதியில் மேலும் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற கோணத்தில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

Tags : Lashkar-e-Taiba ,Kashmir ,Kupwara , Kashmir, Kupwara, Encounter, Lashkar-e-Taiba
× RELATED ஒன்றிய அமைச்சருக்கு லஷ்கர் கொலை மிரட்டல்