×

ஒகேனக்கல்லில் குளிக்க, பரிசல் இயக்க அனுமதி

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் கடந்த 18ம் தேதி 25 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மெயினருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகிய பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் அருவிகள், ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும், காவிரியில் பரிசல் இயக்குவதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்நிலையில் தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தணிந்ததால் ஒகேனக்கல் காவிரிக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக குறைந்துள்ளது.

நேற்று ஒகேனக்கல் காவிரியில் வினாடிக்கு 10,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 8,000 கனஅடியாக சரிந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அருவிகளில் குளிக்கவும் காவிரியில் பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை இன்று காலை 9 மணி முதல் நீக்கப்பட்டதாக கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்தார். கடந்த 7 நாட்களுக்கு பின் மீண்டும் குளிக்க, பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Tags : Okanagan , Okanagan, permission to run the gift,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி