×

திருச்சி மோருபட்டியில் டாஸ்மாக் கடை அமைக்க இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்ற கிளை

மதுரை: திருச்சி மோருபட்டி கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்தது. மோருபட்டியில் வழிபாட்டுத் தலம், பள்ளிக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் அமைக்கப்பட உள்ளதாக புகார் அளிக்கப்பட்டது. மோருபட்டி கிராமத்தில் எந்தவொரு சர்வே எண்ணிலும் டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  


Tags : High Court ,Trichy Morupatti , Trichy, Morupatti, Tasmac Store, Interim Ban, High Court Branch
× RELATED ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர்...