×

பூந்தமல்லி அருகே பரபரப்பு தலை, கைகளை துண்டித்து வாலிபர் எரித்துக்கொலை?: குப்பை மேட்டில் உடல் வீச்சு

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே குப்பை மேட்டில் தலை, கைகள் துண்டிக்கப்பட்டு எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை யாராவது கொலை செய்து குப்பை மேட்டில் வீசிசென்றார்களா என போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை அருகே பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கத்தில் இருந்து கண்ணபாளையம் செல்லும் சாலையில் குப்பை கிடங்கு உள்ளது. இதன் வழியாக இன்று காலை சிலர் சென்றபோது அங்கு தலை மற்றும் கைகள் துண்டிக்கப்பட்டு எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பது பார்த்ததும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதன் அடிப்படையில், ஆவடி, திருவேற்காடு மற்றும் பூந்தமல்லி காவல்நிலையங்களில் இருந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதன்பிறகு சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எரித்துக் கொல்லப்பட்ட நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? வேறு எங்காவது கொலை செய்துவிட்டு குப்பை மேட்டில் சடலத்தை எரித்து சென்றார்களா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முடிவுக்கு வந்த எல்லை பிரச்னை
வாலிபர் கொல்லப்பட்ட குப்பை மேடு  ஆவடி காவல்நிலைய  எல்லைக்குள் வரவில்லை என்பதால் ஆவடி போலீசார் உடனடியாக அங்கிருந்து சென்றுவிட்டனர். இதன்பிறகு யார் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வருகிறது என்று பூந்தமல்லி,  திருவேற்காடு காவல்நிலைய போலீசாரிடையே பிரச்னை ஏற்பட்டது. ஒருவழியாக எல்லை குழப்பம் முடிவுக்கு வந்தது. இதுபற்றி பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிப்பார்கள் என்று தெரிகிறது.

Tags : Poonamallee , Poonamallee, head, hands amputated, cremated
× RELATED பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டம்...