×

மீனவ பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை; உறவினர்கள் சாலை மறியல்: 6 வடமாநில இளைஞர்கள் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள மீனவ கிராமத்தில் 45 வயது மீனவ பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 500-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் அருகே வடகாடு என்ற கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அக்கிராமத்தை சேர்ந்த சந்திரா(45) என்ற மீனவ பெண் காலையில் கடல்பாசி சேகரிப்பதற்காக கடலுக்கு சென்ற நிலையில் மாலை வரை வீடு திரும்பாததால் அச்சமடைந்த கணவரும் அவரது உறவினர்களும் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து வடகாடு காட்டுப்பகுதியில் போலீசாரும் கிராம மக்களும் தேடி சென்றபோது காட்டுப்பகுதியில் மீனவ பெண் அரைநிர்வாணமாக எரிந்த நிலையில் கிடந்ததையடுத்து அதிர்ச்சியடைந்தனர்.

அப்பகுதியில் செயல்பட்டுவரும் இறால் பண்ணையில் வேலை செய்யும் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இறால் பண்ணையை அடித்து நொறுக்கி தீவைத்து கொளுத்தினர். இறால் பண்ணையில் பணிபுரிந்த 6 வடமாநில இளைஞர்கள் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். பின்னர் அவர்களை அங்குள்ள அறையில் பூட்டிவைத்தனர். இதையடுத்து போலீசார் மீனவ பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர்.

ஆனால் உடலை எடுக்க எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் போலீசாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அக்கிராம மக்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் உடலை எடுக்க அனுமதித்தனர். கிராம மக்களால் அடித்து அறையில் பூட்டிவைக்கப்பட்ட இளைஞர்களை மீட்ட போலீசார் சிகிக்சைக்காக மதுரைக்கு அனுப்பிவைத்தனர்.  முதற்கட்ட விசாரணையில் மீனவ பெண்ணை காட்டு பகுதியில் வைத்து இறால் பண்ணையில் வேலை பார்க்கும் ஒடிசாவை சேர்ந்த இளைஞர்கள் கஞ்சா போதையில் கூட்டுப்பலியால் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

பின்னர் சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்தும் தெரியவந்துள்ளது. முதற்கட்ட பிரேத பரிசோதனையில் 3 பேர் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரில் எந்த 3 பேர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.         


Tags : Fisherwoman gang-raped and burnt to death: 6 North Indian youths arrested
× RELATED மதுரையில் வாலிபர் வெட்டிக் கொலை