வேலூர்: ராஜிவ் கொலையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டுக்கு வீடியோ காலில் முருகன் பேசிய வழக்கு விசாரணை வேலூர் 3வது மாஜிஸ்திரேட் பத்மகுமாரி முன்பு நடந்து வந்தது. இந்த வழக்கில் போதிய சாட்சியங்களை அரசு தரப்பு தராததால் இந்த வழக்கில் இருந்து முருகனை விடுவித்து மாஜிஸ்திரேட் நேற்று தீர்ப்பளித்தார்.