×

திருமாவளவனுடன் பேரறிவாளன் சந்திப்பு

சென்னை: விசிக தலைவர் திருமாவளவனை பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் நேற்று விசிக தலைவர் திருமாவளவனை, பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது, திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பேரறிவாளன் விடுதலை என்பதை விட பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கில் அரசியல் அமைப்பு சட்டத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கினார்கள். மாநில அரசின் முடிவுகள் எதுவாக இருந்தாலும் அந்த முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர். அதன்படி, அவர் இயங்க வேண்டும் என்பதுதான் 161 பிரிவு அதிகாரத்தை வழங்குகிறது. பேரறிவாளன் விடுதலையில் விமர்சிப்பதற்கு எதுவுமில்லை. 100 சதவீதம் சட்டப்பூர்வமாக அவர் விடுதலை அடைந்துள்ளார். சட்டப்போராட்டத்தை நடத்த ஆரம்பத்தில் இருந்தே அற்புதம்மாள் அனைத்து கட்சிகளின் ஆதரவையும் திரட்டினார். ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் பங்களிப்பை செலுத்தினார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Perarivalan ,Thirumavalavan , Perarivalan meeting with Thirumavalavan
× RELATED ஸ்டாலினின் தேர்தல் வியூகம் மோடியை நடுங்க வைத்துள்ளது; திருமாவளவன் பேச்சு