×

ரவுடிகள் ஐந்து பேர் கைது: ஆயுதங்கள் பறிமுதல்

பெரம்பூர்: கொடுங்கையூர் பகுதியில் பிரபல ரவுடிகள் ஐந்து பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து கத்தி உள்பட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். சென்னை கொடுங்கையூர் வாசுகி நகரை சேர்ந்தவர் தாமோதரன் (42). சொந்தமாக ஆட்டோ ஓட்டி வரும் இவர், நேற்றிரவு 11 மணியளவில், கொடுங்கையூர்-தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை சின்னாண்டிமடம் சந்திப்பு வந்போது அவரது ஆட்டோவை 5 பேர் மறித்து நிறுத்தி, தாமோதரனிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாயை பறித்து தப்பினர்.

இதுகுறித்து தாமோதரன் கொடுத்த தகவல்படி, கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் தலைமையில் போலீசார் விரைந்து சென்று அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொடுங்கையூர் எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (27), கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (32), வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ராஜேஷ் (எ) சப்ப ராஜேஷ் (36), கொடுங்கையூர் ஆர்.ஆர் நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (எ) குள்ளமணி (22), ஜனா (எ)ஜனார்த்தனன் (30) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

இவர்கள் மீது கொடுங்கையூர், வியாசர்பாடி, எம்கேபி.நகர் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர்களிடம் இருந்து இரண்டு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன்பின்னர் ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Five rowdies arrested: Weapons confiscated
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...