திருச்சி: திருவெறும்பூர் அருகே மாணவியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவெறும்பூரில் கல்லூரி மாணவியை காலிப்பதாகக் கூறி இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததாக புகார் தெரிவித்துள்ளனர். சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்த மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.