நெமிலி : நெமிலி பகுதிகளில் ஆபத்தான முறையில் பஸ் படிக்கட்டு மற்றும் ஏணியில் தொங்கியபடி கல்லூரி மாணவர்கள் பயணம் செய்கின்றனர். இதை தவிர்க்க கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் பஸ்களில் சென்று வருகின்றனர். இதற்காக காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்படும் பஸ்களில் போதிய இடம் இல்லாததால் மாணவ, மாணவிகள் பஸ்சின் படிக்கட்டு மற்றும் பின்புறத்தில் உள்ள ஏணியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர்.