×

சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட மேலும் 4 முன்னாள் பள்ளி மாணவிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை: 7 பக்க குற்றப்பத்திரிகை தயார்

சென்னை: சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட மேலும் 4 முன்னாள் பள்ளி மாணவிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. சிவசங்கர் பாபா மீதான 2வது போக்சோ வழக்கில் 7 பக்க குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி தயார் செய்தது. சிவசங்கர் பாபா மீது 6 போக்சோ வழக்குகள் உட்பட 8 வழக்குகளை, சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துள்ளனர். மாணவிகளிடம் வீடியோ கால் மூலமாக ஆபாசமாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் 7 பக்க குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

மேலும் சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட மேலும் 4 முன்னாள் பள்ளி மாணவிகளிடம் சிபிசிஐடி போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகிறது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நே‌ஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் உச்சநீதிமன்றம் சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது. சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கில், இது வரை முன்னாள் மாணவிகள் 18 பேர் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பாலியல் புகார் அளித்த உள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


Tags : CPCID ,Sivasankar Baba , Sivashankar Baba, 4 former school student, CPCIT, interrogation
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின்...