×

நெமிலி அருகே ஆபத்தான நிலையில் பஸ் படிக்கட்டு, ஏணியில் பயணிக்கும் மாணவர்கள்: கூடுதல் பஸ்களை இயக்க கோரிக்கை

நெமிலி: நெமிலி அருகே ஆபத்தான நிலையில் பஸ்சின் படிக்கட்டு, ஏணியில் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். இதனை தவிர்க்க கூடுதல் பஸ்களை இயக்கவேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அரசு, தனியார் பஸ்களில் சென்று வருகின்றனர். இதற்காக காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்படும் பஸ்களில் போதிய இடங்கள் இல்லாததால் மாணவ, மாணவிகள் பஸ்சின் படிக்கட்டிலும், பின்புறத்தில் உள்ள ஏணியில் ஏறி ஆபத்தான நிலையில் பயணிக்கின்றனர்.

குறிப்பாக நெமிலி இருந்து  காஞ்சிபுரம், பாணாவரம்  செல்லும் பஸ்கள், அரக்கோணத்தில் இருந்து நெமிலி வழியாக வேலூர் செல்லும் பஸ், பனப்பாக்கத்தில் இருந்து திருமால்பூர் செல்லும் பஸ் ஆகியவற்றில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அலுவலக ஊழியர்களால்   கூட்ட நெரிசல் அதிகரித்து படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் சூழல் ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் சூழல் நிலவுகிறது. சில இடங்களில் உயிர் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
எனவே மேற்கண்ட வழித்தடங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நன்மை கருதி கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள், அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Nemli , Nemili, bus stairs, ladder, extra bus
× RELATED நெமிலி அருகே அதிமுக ஆட்சியில் ரூ.1.6...