சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரிப்பது என ஒரு மனதாக முடிவு செய்திருப்பதாக பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை அதிமுக நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு கோரிய நிலையில், ஜி.கே.மணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடங்களுக்கு ஜூன் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.