×

தமிழ் இலக்கியம், பண்பாட்டு ஆய்வாளர் ஆ.இரா.வெங்கடாசலபதிக்கு 2021ம் ஆண்டுக்கான இயல் விருது அறிவிப்பு!: நீதிபதி கே.சந்துருவுக்கும் விருது

சென்னை: தமிழ் இலக்கியம், பண்பாட்டு ஆய்வாளர் ஆ.இரா.வெங்கடாசலபதிக்கு 2021ம் ஆண்டுக்கான இயல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியம், பண்பாட்டு தளங்களில் வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்படும் உயரிய விருது இதுவாகும். கனடாவை சேர்ந்த தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பின் சார்பில் இயல் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. நீதிபதி கே.சந்துரு (கட்டுரை), பா.அ.ஜெயகரன் (புனைவிலக்கியம்), ஆஸி.யை சேர்ந்த ஆழியாள் (கவிதை ) ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Venkatachalapathy ,K. Chandru , Tamil Literature, IRA Venkatachalapathy, Science Award
× RELATED கோவில்பட்டியில் பரிதாபம் நடந்து சென்ற லாரி டிரைவர் கீழே விழுந்து பலி