சென்னை: திருவண்ணாமலை அருகே வேங்கைக்காலில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சிலையை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது. கிரிவலப்பாதை மற்றும் நெடுஞ்சாலையை இணைக்கும் இடத்தில் சிலை வைக்கக்கூடாது என தொடரப்பட்ட வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிலை வைக்கும் இடத்தை ஆய்வு செய்து ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்யாமல் அவகாசம் கேட்டார். தமிழக அரசு, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், அமைச்சர் வேலு, ஜீவா கல்வி அறக்கட்டளை பதில் தரவும் ஆணையிடப்பட்டது.