நெல்லை: நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக கனிமவள உதவி இயக்குனர் வினோத் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவித்துள்ளார். கல்குவாரி விபத்து மீட்பு பணிகள் குறித்து ஆட்சியர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், விபத்தில் சிக்கியுள்ள 6வது நபரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகளில் தற்போது முழு கவனம் செலுத்தப்படுகிறது என்று கூறினார்.