சென்னை: பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். வெள்ளைத்துணியால் வாயை கட்டிக்கொண்டு சத்தியமூர்த்தி பவனில் சிவராஜ் தலைமையில் காங்கிரசார் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். வன்முறையை எதிர்ப்போம் என்ற வாசகம் அடங்கிய பதாகையை கையில் ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.