விழுப்புரம்: விழுப்புரம் தொகுதி திமுக எம்எல்ஏ லட்சுமணனுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அதில் அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி லட்சுமணன் எம்எல்ஏ வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.