×

தகராறை தடுத்து நிறுத்தியதால் ரவுடி ஆத்திரம் மூதாட்டி வெட்டிக் கொலை: ஆதம்பாக்கத்தில் பயங்கரம்

ஆலந்தூர்: பொது இடத்தில் தகராறு செய்ததை தட்டிக்கேட்டதால் மூதாட்டியை வெட்டிக்கொலை செய்த ஆதம்பாக்கம் ரவுடியை கைது செய்தனர். சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (எ) விக்கி (26). பிரபல ரவுடியான இவர் மீது ஆதம்பாக்கம் காவல் நிலையம் உள்பட பல காவல்நிலையங்களில் வழக்குகள் உள்ளது. இவரது வீட்டுக்கு எதிரில் உள்ள வீட்டில் பிளஸ் 2 படிக்கும் மாணவி வசிக்கிறார். இந்த நிலையில், நேற்றிரவு விக்னேஷ், ‘’பிளஸ் 2 படிக்கும் மாணவியை தனக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும்’’ என்று குடும்பத்தினரை மிரட்டியுள்ளார். இதனால் மாணவியின் குடும்பத்தினர் விக்கியை அடித்து விரட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஷ், அங்கு சாலையில் கிடந்த கற்களை எடுத்து எதிர்வீட்டின் மீது சரமாரியாக வீசியுள்ளார். சில கற்கள் அங்குள்ள ஹேமாவதி என்பவர் வீட்டின் மீது விழுந்து உள்ளது. இதனால் அவர்களும் விக்னேஷை கண்டித்துள்ளனர்.

இதையடுத்து அங்கிருந்து ஆத்திரத்துடன் சென்ற விக்னேஷ் ஒரு வீட்டில் உள்ள கத்தியை எடுத்துவந்து என்னிடம் தகராறு செய்தால் வெட்டிவிடுவேன் அனைவரையும் மிரட்டியுள்ளார். இதை பார்த்ததும் ஹேமாவதியின் தாய் வெள்ளைத்தாய் (65) வந்து தட்டிக்கேட்டுள்ளார். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த விக்னேஷ், தான் வைத்திருந்த கத்தியால் வெள்ளைத்தாய் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் 3 இடத்தில் பலத்த காயம் அடைந்து ரத்தம் கொட்டியதால் வெள்ளைத்தாய் மயக்கம் போட்டு விழுந்ததை பார்த்ததும் ரவுடி விக்னேஷ் அங்கிருந்து தப்பிவிட்டார். இதன்பிறகு மூதாட்டியை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், வெள்ளைத்தாய் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஆதம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் ரத்னகுமார் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்திவிட்டு வெள்ளைத்தாயின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். ரவுடி விக்னேஷை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.
பொது இடத்தில் நடந்த தகராறை தட்டிக்கேட்ட மூதாட்டி வெட்டிக்கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



Tags : Rowdy ,Adambakkam , Dispute, Stopping, Rowdy, Grandmother, Vettik Murder
× RELATED 8 ஆண்டாக தலைமறைவாகி கொலை, கொள்ளைகளை...