×

பதவி உயர்வை உரிமையாக கேட்க முடியாது ஐகோர்ட் கிளை தீர்ப்பு

மதுரை: தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி மற்றும் நாசரேத் ஊராட்சிகளில் பொது சுகாதார பணியாளர்களாக பணியாற்றும் சுடலைமாடன் மற்றும் முருகன் ஆகியோர், தங்களுக்கு விதிப்படி சுகாதார பணியாளர் மேஸ்திரியாக பதவி உயர்வு வழங்குமாறு உத்தரவிடக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர். இந்த மனுவை நீதிபதி எஸ்.விசாரித்த நீதிபதி எம்.சுப்ரமணியம், ‘‘பதவி உயர்வு வழங்க வேண்டுமென உரிமையாக கேட்க முடியாது. ஆனால் பதவி உயர்வை பரிசீலிக்கக் கோருவது அவரவர் உரிமை. எனவே, பதவி உயர்வு கோரும் மனுதாரர்களின் நிவாரணத்தை இந்த நீதிமன்றத்தால் வழங்க முடியாது என்பதால், இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன’’ என உத்தரவிட்டுள்ளார்.

Tags : Icord Branch , Judgment of the Icord Branch on the right to promotion
× RELATED அனைத்து சாதியினருக்கும்...