டெல்லி: அமலாக்கத்துறை விசாரணைக்கு மேற்கு வங்க அரசு முழு ஒத்துழைப்பு வழங்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அமலாக்கத்துறை விசாரணையை மேற்கு வங்க அரசு தடுத்து நிறுத்த முயல்வதை எந்த வகையிலும் ஏற்க இயலாது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் மருமகன் அபிஷேக், மனைவியை டெல்லிக்கு வரவழைத்து விசாரிக்க இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.