சென்னை: இளைஞர்களுக்கு தொழில் துறையில் பயிற்சி அளிக்க 22 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் திறன் மேம்பாட்டுக் கழக அலுவலகத்தில் நடந்த ஆய்வுகூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் சி.வி.கணேசன் தகவல் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் 11 துறை திறன் சபைகளுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பயிற்சி செலவை தமிழ்நாடு திறன் மேம்பட்டு கழகம் ஏற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்