சென்னை: சென்னை சைதாப்பேட்டை பேருந்து பணிமனை அருகே மாநகர பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரி மாணவர்கள் தாக்கியதாக புகார் தெரிவித்து மாநகர பேருந்து ஓட்டுனர்கள் நடத்துனர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதே போல் பேருந்து ஓட்டுனர்கள், நடத்துநர்கள் தாக்கியதாக புகார் தெரிவித்து கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.