பொன்னமராவதி : பொன்னமராவதி அருகே உள்ள தேரடி மலம்பட்டி மலங்கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடந்தது. மேலமேலநிலை ஊராட்சி தேரடி மலம்பட்டி மலங்கண்மாய் மீன்பிடித்திருவிழா நேற்று நடைபெற்றது. ஊர் முக்கியஸ்தர்கள் சுவாமி வழிபாடு செய்து வெள்ளை வீசி மீன் பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர்.
இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு வலை, ஊத்தா, தூரி, கச்சா மற்றும் பாத்திரம் கூடைகள் மூலம் மீன் பிடித்தனர். இதில் நாட்டு வகை மீன்களான விரால், கட்லா, ஜிலேபி, கெண்டை, அயிரை உள்ளிட்ட மீன்கள் கிடைத்தன.