×

21 கி.மீ. நீளம், 7 என்ட்ரி, 6 எக்சிட், டபுள் டக்கர் பாலம்.. சென்னை மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது!!

சென்னை : சென்னை மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட சாலை திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் , ஒன்றிய சாலை, போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் - தமிழ்நாடு அரசு - சென்னை துறைமுகம் - கடற்படை இடையே கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த சென்னை மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் மீண்டும் புத்துயிர் பெறுகிறது.

சென்னை மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டம்

*சென்னை மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைமொத்த திட்டத்தின் மதிப்பு 5,885 கோடி ரூபாய் ஆகும்.

*இந்த திட்டத்தின் கீழ் 20.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலம் அமைக்கப்பட உள்ளது.

*இதில் கோயம்பேடு முதல் நேப்பியர் பாலம் இடையே உள்ள தூரம் மட்டும் இரட்டை அடுக்கு பாலமாக அமைக்கப்படும். ஒரு பாலம் நேப்பியர் டூ கோயம்பேடு செல்லவும் , இன்னொரு பாலம் கோயம்பேடு டூ நேப்பியர் செல்லவும் ஒன் வே போல பயன்படுத்தப்படும். இதனால் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.

*20.6 கிலோ மீட்டர் தூர பாலத்தில் மொத்தம் 7 என்ட்ரி இருக்கும். அதாவது வேறு வேறு சாலைகளில் இருந்து பாலத்திற்குள் 7 இடங்களில் இணைய முடியும். முக்கிய இடங்களில் மட்டும் இந்த 7 இணைப்புகள் வைக்கப்படும்.

*அதேபோல் பாலத்தில் இருந்து வெளியேற 6 இடங்களில் எக்சிட் வைக்கப்படும். அதாவது இரட்டை அடுக்கு பாலம் உள்ள பாதையில் பாலத்தில் இருந்து வெளியேற 6 எக்சிட் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

*இந்த சென்னை மதுரவாயல் - துறைமுகம் சாலை திட்டத்திற்கு வருகிற 26ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.


Tags : Chennai Maduravayal - Port , Double Tucker, Bridge, Chennai Maduravayal, Port
× RELATED ஆவடி அருகே நகைக்கடையில் புகுந்து...