பெரம்பலூர்: தொலைதூர பயணப் பேருந்து கட்டண உயர்வு பட்டியல் அதிகாரிகளால் தயார் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஆந்திரா, கேரளா அரசுப்பேருந்துகளில் தொலைதூர பயணப் பேருந்து கட்டண விகிதத்தை ஆராய்ந்து பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அரசுப்பேருந்து கட்டண உயர்வு குறித்து இதுவரை முதல்வர் உத்தரவிடவில்லை என்று அமைச்சர் சிவசங்கர் பெரம்பலூரில் பேட்டியளித்துள்ளார்.