×

திரிபுரா முதல்வராக மாணிக் பதவியேற்பு

அகர்தலா: திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வராக மாணிக் சகா நேற்று பதவியேற்றார். திரிபுரா முதல்வராக இருந்த பிப்லாப் குமார் தேவின் சர்ச்சை பேச்சுகள், முடிவுகளால் அவர் மீது கட்சியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. இந்நிலையில், கட்சி தலைமையின் உத்தரவுப்படி பிப்லாப் நேற்று முன்தினம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய முதல்வரை தேர்வு செய்ய அகர்தாலாவில் நடந்த பாஜ எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில், புதிய முதல்வராக மாணிக் சகா தேர்வு செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்எல்ஏ.வான ராம் பிரசாத் பால் கோபத்தில் அங்கிருந்த சேர்களை அடித்து உடைத்தார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், புதிய முதல்வராக மாணிக் சகா நேற்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்யா பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற பிறகு மாணிக் சகா கூறுகையில், ‘‘பிரதமர் மோடியின் வளர்ச்சியை முன்னிறுத்தி மாநில மக்களின் முன்னேற்றத்திற்காக உழைப்போம்,’’ என்றார்.

Tags : Manik ,Tripura ,Chief Minister , Manik takes over as Tripura Chief Minister
× RELATED திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூ.வை...