×

பயணிகள் இல்லாததால் 4 இலங்கை விமானம் ரத்து

சென்னை: சென்னையில் இருந்து இலங்கை செல்லும் ஸ்ரீ லங்கன் மற்றும் ஏர் இந்தியாவின் 4 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டன. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால், வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக, சென்னை விமான நிலையத்திலிருந்து இரவு நேரங்களில் இலங்கைக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.

போதிய பயணிகள் இல்லாததால், சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 12.20 மணிக்கு இலங்கையின் கொழும்பு நகருக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது. இதேபோல் இலங்கையில் இருந்து சென்னைக்கு நேற்று அதிகாலை 2.25 மணிக்கு வரவேண்டிய, இங்கிருந்து அதிகாலை 3.25 மணிக்கு இலங்கை செல்லும் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்சின் 2 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், நேற்று ஞாயிறு விடுமுறை  தினம் என்பதாலும், இரவு நேரங்களில் இலங்கைக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததாலும், நேற்று ஏர் இந்தியா மற்றும் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்சின் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

Tags : 4 SriLankan flights canceled due to lack of passengers
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...