×

கச்சிராயபாளையம் அருகே ஒருங்கிணைந்த துப்புரவு முகாம்

சின்னசேலம்: வடக்கநந்தல்  பேரூராட்சிக்கு உட்பட்ட ஒவ்வொரு வார்டிலும் அனைத்து இடங்களையும் சுத்தப்படுத்தும் நோக்கத்தில் ஒரு மாதத்தில் 2வது மற்றும் 4வது  சனிக்கிழமைகளில் ஒருங்கிணைந்த துப்புரவு முகாம் நடத்துவது என  தீர்மானிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை வடக்கநந்தல் பேரூராட்சிக்கு உட்பட்ட வெங்கட்டம்மாபேட்டை 13வது வார்டில் மேஸ்திரி ராஜா, குடிநீர் திட்ட பணியாளர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் வார்டு கவுன்சிலர் பெரியம்மாள் முன்னிலையில் தார் சாலை ஓரம், தெருக்கள், மும்முனை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் 30 பெண் மற்றும் 20 ஆண் துப்புரவு பணியாளர்கள்மூலம் மண்வெட்டி, களைக்கட்டு கொண்டு சுத்தம் செய்தனர்.

இதையடுத்து அந்த பகுதிக்கு வடக்கநந்தல் பேரூராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம், துணைத்தலைவர் தண்டபாணி ஆகியோர் சென்று  வெங்கட்டம்மாபேட்டையில் துப்புரவு பணிகளை ஆய்வு செய்தார். மேலும் தெருவோரம் முளைத்துள்ள புல், முட்செடிகளை மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


Tags : Kachirayapalayam , Integrated cleaning camp near Kachirayapalayam
× RELATED கச்சிராயபாளையம் அருகே நள்ளிரவு கூரை...