×

நாமக்கல்லில் தனியார் அச்சகங்கள் மூடல்

நாமக்கல்: சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக, நாமக்கல் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட அச்சகங்கள் நேற்று அடைக்கப்பட்டது.
அச்சக தொழிலுக்கு தேவையான காகிதம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் வகையில், தமிழ்நாடு மாஸ்டர் பிரிண்டர்ஸ் பெடரேசன் சார்பில், நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனியார் அச்சக உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர். இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு,  பரமத்திவேலூர் ஆகிய ஊர்களில் உள்ள 200க்கும் மேற்பட்ட அச்சகங்கள் நேற்று ஒரு நாள் அடைக்கப்பட்டன.

Tags : Namakkal , Closure of private printing presses in Namakkal
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...