×

திருக்காம்புலியூர் வழியாக செல்லும் பாசன வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கரூர்: கரூர் திருக்காம்புலியூர் வழியாக செல்லும் பாசன வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமராவதி ஆறு பயணிக்கும் செட்டிப்பாளையம் தடுப்பணை பகுதியில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பாசன வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் பிரித்து விடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், திருக்காம்புலியூர் வழியாகவும் பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த பகுதியை சுற்றிலும் அதிகளவு குடியிருப்பு, வர்த்தக நிறுவனங்கள் உள்ள நிலையில், கழிவு நீரும் பாசன வாய்க்காலில் கலந்து செல்கிறது. இதனால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே, வாய்க்காலில் கழிவு நீர் செல்லாத வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Measures to prevent mixing of sewage in the irrigation canal passing through Thirukambuliyur: Public expectation
× RELATED மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு:...