சென்னை: சென்னை மாநகர பேருந்துகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டனர். ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது போக்குவரத்துத்துறை. பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்காக 500 மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அவரச கால அழைப்பு பொத்தான் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.