×

ஓட்டேரியில் விபரீத சம்பவம் 17 வயது மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய கொடூர தாய்: போலீசுக்கு பயந்து வீட்டிலேயே பிரசவம் பார்த்த பயங்கரம்

சென்னை: பதினேழே வயதான மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய தாய், போலீசுக்கு பயந்து கர்ப்பமான மகளுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த விபரீத சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. தலைமறைவான தாயையும், கள்ளக்காதலனையும் போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை ஓட்டேரியை சேர்ந்தவர் புவனேஸ்வரி (40). இவரது கணவர் பாரதி. இவர்கள் 6 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதனால், புவனேஸ்வரி மகளுடன் தனியே வசித்து வருகிறார். இந்நிலையில் மகளுக்கு 17 வயது ஆனது. அப்போது, ஓட்டேரி முத்துக்குமார் (50) என்பவருடன் புவனேஸ்வரிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. முத்துக்குமாருக்கு தன் 3 பிள்ளைகளை விட்டுவிட்டு புவனேஸ்வரியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், முத்துக்குமாருக்கு புவனேஸ்வரியின் மகள் மீது தன் ஆசையை தெரிவித்துள்ளார். இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்ததால் ஒரு வருடமாக முத்துக்குமாருடன் மகளை ஜாலியாக இருக்க அனுமதித்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானார். மருத்துவமனைக்கு அழைத்து சென்றால் சிறுமியின் வயது மற்றும் கர்ப்பம் பற்றிய விவரம் தெரியவரும். இதனால் போலீசில் மாட்டிக் கொள்வோம் பயந்தார். இதனால், கர்ப்பிணி மகளுக்கு அவரே வீட்டில் வைத்து வைத்தியம் பார்த்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் புவனேஸ்வரி போலீஸ் பயத்தில் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. 2 நாட்கள் கழிந்த நிலையில் குழந்தையின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. உடனே ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்கு குழந்தையை புவனேஸ்வரியும், முத்துகுமாரும் கொண்டு சென்றனர். அங்கிருந்த செவிலியர்கள், `குழந்தை எங்கு பிறந்தது, குழந்தையின் பெற்ேறார் யார்’ என கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள், `குழந்தையின் தாய்க்கு 19 வயதாகிறது’ என்றுள்ளனர்.இதையடுத்து, `ஆதார் கார்டு கொடுங்கள். அந்த எண்ணை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு முறையும் வரும்போது உங்களுக்கான சலுகைகள் கிடைக்கும்’ என்று செவிலியர்கள் கூறியுள்ளனர். சிறுமியின் ஆதார் கார்டை புவனேஸ்வரி கொடுத்துள்ளார். அப்போது, சிறுமிக்கு 17 வயதுதான் ஆகிறது என்பது தெரியவந்தது.

உடனே சிறுமியின் தந்தை யார் என கேட்டபோது முத்துக்குமார் என்று புவனேஸ்வரி கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம், உடனடியாக குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் குழந்தைகள் நல அமைப்பினர் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்படி இன்ஸ்பெக்டர் கோமதி தீவிரமாக விசாரித்தார். இதை அறிந்ததும் முத்துகுமாரும், புவனேஸ்வரியும் தலைமறைவாகி விட்டனர். இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர். பெற்ற மகளையே கள்ளக்காதலனுக்கு ஒரு வருடமாக விருந்தாக்கி, பிறந்த குழந்தையையும் மறைத்த தாயின் செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Otteri , Tragic incident in Ottery Brutal mother treats 17-year-old daughter to fake boyfriend: Terror at home for fear of police
× RELATED சென்னை ஓட்டேரியில் ரவுடிகள் மீது மர்ம...