×

நீட் தேர்வை தள்ளி வைக்க சொல்லிய மாணவர்களின் கோரிக்கை நியாயமானது: ராகுல் காந்தி ட்வீட்

டெல்லி: 21ம் தேதி முதுநிலை நீட் தேர்வு நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து டிவிட்டரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அதில்; NEET PG கவுன்சிலிங் தாமதத்திற்கு மாணவர்கள் காரணம் இல்லை. எழுத்து தேர்வை தள்ளி வைக்க சொல்லிய மாணவர்களின் கோரிக்கை நியாயமானது. கொரோனா காலத்தில் இரவு பகல் பாராமல் மருத்துவர்கள் உழைத்தார்கள்; அரசு நீதி வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


Tags : NEET ,Rahul Gandhi , Students' demand to postpone NEET exam is justified: Rahul Gandhi tweets
× RELATED ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற...