சென்னை: இலங்கை தமிழர்கள் கண்ணீரை துடைத்திருக்கிறார் முதல்வர் என வைகோ எம்.பி. தெரிவித்த்துள்ளார். ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்ட துயரத்தை போக்க என்ன செய்ய வேண்டுமோ அதனை படிப்படியாக செய்வோம் என முதலமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்து அதிகாரிகளை அனுப்பி ஏற்பாடுகளை செய்திருக்கும் முதலமைச்சர், நாடாளுமன்ற குழுவை மத்திய அரசை வலியுறுத்த ஏற்பாடு செய்யவுள்ளதாக கூறியுள்ளார் எனவும் கூறினார்.