×

குடிநீர் வாரியம் சார்பில் திறந்தவெளி குறைதீர் கூட்டம்: நாளை நடக்கிறது

சென்னை: குடிநீர், கழிவுநீர் பிரச்னை குறித்து நாளை நடக்கும் திறந்தவெளி கூட்டத்தில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம், என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. சென்னை குடிநீர் வாரியம் சார்பில் மாதம்தோறும் 2வது சனிக்கிழமை திறந்தவெளி குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்துக்கான கூட்டம் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, குடிநீர் வாரியத்தின் அனைத்து பகுதி அலுவலகங்களிலும் நடக்கிறது.  இதில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தபட்ட பிரச்னைகள் மற்றும் குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக விண்ணப்பித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். மேலும் மழைநீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான விளக்கங்களையும் இக்கூட்டத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு பகுதி அலுவலக கூட்டமும் ஒரு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும், என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

Tags : Drinking Water Board , Open Water Meeting on behalf of the Drinking Water Board: Tomorrow is happening
× RELATED குடிநீர் கட்டணங்களை செலுத்த மார்ச்...