சென்னை: நூல் விலையை குறைப்பது தொடர்பாக, ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் 45 சதவீத நூற்பாலைகள் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ளது. கடந்த 12 மாதங்களில் அனைத்து நூல் ரகங்களுக்கும் ஒரு கிலோவிற்கு சுமார் ரூ.150 முதல் ரூ.200 வரை விலை உயர்ந்துள்ளது. ஆளுநர் உரையின்போது, அனைத்து ரக நூல் விலை உயர்வு பற்றியும், விலை உயர்வை உடனடியாக குறைக்க வேண்டும் என்றும், சட்டமன்றத்தில் பேசினேன்.