×

1 முதல் 9ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை: கோடைக்கு பிறகு ஜூன் 13ல் திறப்பு

சென்னை: பொதுத்தேர்வுகள் முடிவதால் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை விடப்படுகிறது. கோடைக்கு பிறகு ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கான தேர்வுகள் இன்றுடன் முடிவடைகின்றன. இந்த கல்வி ஆண்டுக்கான கடைசி வேலை நாளும் இன்றுடன் முடிகிறது. இதையடுத்து, அடுத்த 2022-2023ம் கல்வி ஆண்டு ஜூன் மாதம் தொடங்கும் என்றும், அதனால், பிளஸ் 1 வகுப்பு தவிர மற்ற வகுப்புகளுக்காக பள்ளிகள் ஜூன் 13ம் தேதி திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது. இதன்படி, நாளை முதல் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் செயல்படாது என்பதால் விடுமுறை நாளாக இருக்கும். இந்நிலையில், 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகள் தற்போது நடக்கிறது. அவை 30ம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : First holiday tomorrow for school students from 1st to 9th grade: Opening on June 13th after summer
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...