×

2013 முதல் 2016 வரை 3 ஆண்டுகளுக்கு வருமான வரி மறுமதிப்பீட்டுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டாம்: வரிகள் ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: வருமான வரித்துறை கள அதிகாரிகளுக்கு ஒன்றிய நேரடி வரிகள் வாரியம் பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு: வரி விதிக்கப்படாத தொகை ரூ.50 லட்சத்துக்கு கீழ் இருக்கும் பட்சத்தில் கடந்த 2013-14, 2014-15 மற்றும் 2015-16 ஆகிய மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்த, குறைந்த அளவில் வரி செலுத்தும் பிரிவில் உள்ளவர்களுக்கு மறுமதிப்பீட்டுக்கான நோட்டீஸ் அனுப்ப வேண்டாம். கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை ஏராளமான மறு மதிப்பீடு நோட்டீஸ்கள் கள அதிகாரிகளால் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே உள்ள வருமான வரி சட்டம் பிரிவு 148ன் கீழ், கொரோனா ஊரடங்கு காலத்தில் கூடுதல் கால அவகாசத்துடன் அமல்படுத்தப்பட்ட புதிய சட்டத்தை பயன்படுத்தி இந்த நோட்டீஸ்கள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற அளித்த தீர்ப்பின் அடிப்படையில், அனைத்து நோட்டீஸ்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். இதற்கேற்ப வழக்குகளை தள்ளுபடி செய்வதற்கான நடைமுறைகளையும் அதிகாரிகள் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Do not send notice for income tax reassessment for 3 years from 2013 to 2016: Tax Commission Order
× RELATED கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த...