×

அறந்தாங்கி அருகே நூற்பாலை இடத்தில் வீட்டுமனை அமைக்க எதிர்ப்பு கிராம மக்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நூற்பாலை அமைக்க அரசு 54 ஏக்கர் இடம் வழங்கியது. இந்த இடத்தை தற்போது தனிநபர்கள் வீட்டுமனை பட்டா அமைக்க முயற்சித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அழியாநிலை கிராமமக்கள் அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த அறந்தாங்கி தாசில்தார் காமராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் மறியல் கைவிடப்பட்டது.

Tags : Noorpalai ,Aranthangi , Aranthangi, spinner, place, people, road block
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு